புதன், 20 நவம்பர், 2013

செய்தி .துளிகள்

மத்திய  அரசு இனி BSNL மற்றும் MTNL தொடர்புகளையே பயன்படுத்த வேண்டும்--மத்திய அரசு முடிவு
    செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொலைதொடர்பு துறை செய்தி தொடர்பாளர் இனி மத்திய அரசு அலுவலகங்களில் BSNL மற்றும்  MTNL லேண்டலைன் பிராட்பேண்டுகளை பயன்படுத்த வேண்டுமென அரசு  முடிவு செய்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான BSNL மற்றும்  MTNL நிறுவனங்களை  சரிவிலிருந்து மீட்கவே இந்த முடிவு என்றார். இதற்கான அமைச்சரவை முடிவு கூடிய சீக்கிரம் வெளியிடப்படும். இதுவரை மத்திய அரசு நிறுவனங்கள் மற்ற தனியார் AIRTEL & VODAFONE  இணைப்புகளை பயன்படுத்திக் கொண்டிருந்தால் அவை உடனடியாக சரண்டர் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  இதே போல மாநில அரசும் செயல்படுத்தும் என எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி கூறினார் . BSNL மற்றும் MTNL-மேம்படுத்த அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருப்பதை  அனைவரும் அறிவோம். அதன் தலைவராக மத்திய அரசின் நிதி அமைச்சர் .சிதம்பரம் இருக்கிறார். அவரின் கவனத்திற்கும் இந்த முடிவு கொண்டு செல்லப்படும்.

கருத்துகள் இல்லை: