வியாழன், 26 டிசம்பர், 2013

கிளைச்செயலர்கள் கூட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்டத் தலைவர் தோழர் V. குமார் தலைமையில் 4.12.2013அன்று  கிளைச்செயலர்கள் 
 கூட்டம் நடைபெற்றது. பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
1 ) ஜனவரி 2014 ற்குள் கிளை மாநாடுகளை நடத்தி முடிப்பது.
2 ) மாவட்ட ,மாநில,அகிலஇந்திய  சங்க நன்கொடை பாக்கிகளை                விரைவாக வசூலித்து மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது.
3 ) ஜனவரி 7 அன்று சென்னையில் நடைபெறவுள்ள சேவை கருத்தரங்கம் மற்றும் நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலிருந்தும் வாகன ஏற்பாட்டுடன் 200 தோழர்கள் கலந்துகொள்வது.
        மேற்கண்ட முடிவுகளை  முழுமையாக அமுல்படுத்திட கிளைச்சங்க நிர்வாகிகளும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் இணைந்து பணியாற்றி வெற்றிகரமாக்கிட தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
K.T.சம்பந்தம் 
மாவட்ட செயலர்

கருத்துகள் இல்லை: