ஞாயிறு, 29 டிசம்பர், 2013

நீதித் தமிழ்!

வழக்கறிஞராக 20 ஆண்டுகள் சீனியர் கவுன்சிலராக 10 ஆண்டுகள்சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதியாக ஏழு ஆண்டுகள் பொறுப்பு வகித்த சந்துரு, 2013மார்ச்சில் ஓய்வுபெற்றார்.

ஏழு ஆண்டுகளில் 96 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு அளித்ததுஅர்த்தமுள்ள ஒருசாதனைஉத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடித்துத் தள்ள உத்தரவிட்டது,கோயில்களில் பெண்கள்  பூசாரிகளாகப்  பணியாற்றலாம் என்று தீர்ப்பளித்தது'பெரியார் அனைவருக்கும் பொதுவானவர்’ என்று அவரின் படைப்புகளை பொதுவுடைமை ஆக்கியது என,தன் பணிக்காலம் முழுக்க நீதியை நிலைநாட்டினார் சந்துரு.

கிட்னிபழுதான டாஸ்மாக்ஊழியர் தொடுத்தவழக்கில்,'மக்களின் ஈரலையும் சிறுநீரகங்களையும்மறைமுகமாகப் பாழ்படுத்தும் டாஸ்மாக் நிறுவனம்மது விற்பனை மூலம் பல ஆயிரம் கோடிகளைச்சம்பாதிக்கிறதுஆனால்அதன் ஊழியரின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்ள மறுப்பது தொழிலாளர் நலசட்டத்துக்கு விரோதமானது’ என்று கூறிஅந்த ஊழியரின் முழு மருத்துவச் செலவையும் அரசேஏற்றுக்கொள்ள உத்தரவிட்டார்.

ஒரு நீதிபதியாகத் தன் சொந்த வாழ்விலும் தூய்மையைப் பேணினார் சந்துருநீதிபதியாகப் பொறுப்பேற்றமேடையிலேயே தன் சொத்துக் கணக்கை வெளியிட்டுஇந்திய நீதித் துறைக்கு முன்மாதிரி ஆனார்.நீதிபதிக்கு முன்பாக வெள்ளைச்   சீருடை ஊழியர்கள்செங்கோல் ஏந்தி 'உஷ்’ என்று சத்தம்எழுப்பிக்கொண்டு செல்லும் நடைமுறையை  நிராகரித்தார்தன் நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்கள்,நீதிபதியை 'மை லார்ட்.’ என்று அழைக்கத் தேவை இல்லை என்று உத்தரவிட்டார்ஓய்வுபெறும்நீதிபதிகளுக்கான பிரிவு உபசார விழாவைக்கூட மறுத்து, 'இத்தகைய சடங்குகள் வீண் செலவு’ என்றுதலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி விடைபெற்றார்வழக்காடிய கனல் காலங்கள்வழங்கிய கனல்தீர்ப்புகளைப் போலவேஓய்வுக்குப் பிறகான கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் அருமைத்தமிழன்... நம் பெருமைத் தமிழன்!
நன்றி: விகடன்

கருத்துகள் இல்லை: