சனி, 28 டிசம்பர், 2013

தோழர். T.S. ராஜன் இயற்கை எய்தினார்.


அன்பார்ந்த தோழர்களே!

தன்னலமற்ற தன்னிகரற்ற தோழர்.T.S.ராஜன் தந்திப்பகுதியின் ஒப்பற்ற தலைவர் இன்று காலை இயற்கை எய்தினார்.தந்திப் போக்குவரத்து 3ம் பிரிவு சங்கத்தின் தமிழ் மாநில செயலராகவும், மாநில தலைவராகவும், அகில இந்திய சங்கத்தின் துணைப்பொதுச்செயலாராகவும், உதவித் தலைவராகவும் அவர் சங்கப்பணீயாற்றியுள்ளார். தந்திப்பகுதியில் அனைத்து தரப்பு ஊழியர்களின் மதிப்பையும், தந்திப்பகுதியில் அனைத்து சங்ககங்களின் மதிப்பையும் பெற்ற ஒரே தலைவர் தோழர்.T.S. ராஜன் எனபதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இறுக்க முடியாது. தான் பின் பற்றிய கொள்கையை வாழ்க்கையிலும் கடைபிடித்தவர். 1968 போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டபோது புன்சிரிப்புடன் அதனை ஏற்றவர். பின்னர் சங்க முயற்சியால் திரும்பவும் பணியில் சேர்ந்து இறுதி மூச்சு வரை தொழிலாளிக்காகவும், இடதுசாரி கருத்துகளுக்காகவும் வாழ்ந்தவர். நமது சங்கம் AIBDPA சங்கத்தை துவக்கியதும் அதில் த்ன்னை இணைத்துக் கொண்ட மாமனிதர். அவரது மறைவிற்கு செங்கொடி தாழ்த்தி மாவட்ட சங்கம் அஞ்சலி செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள். நமது சங்கக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு மாவட்ட சங்கம் அறைகூவல் விடுக்கிறது.

கருத்துகள் இல்லை: