செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

கிளைச்செயலர்கள் மற்றும் செயலகக்கூட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !
 இன்று மாலை நாம் திட்டமிட்டபடி இணைந்த  கிளைச்செயலர்கள் மற்றும் மாவட்ட  செயலகக் கூட்டம் நடைபெற்றது.நமது மாவட்ட தலைவர் தோழர் V.குமார் தலைமை தாங்கினார்.அதில் மார்ச் 08 அன்று குடும்ப விழா நடத்துவது,மீதமுள்ள கிளை மாநாடுகளை நடத்தி முடிப்பது,மேல்மட்ட நன்கொடைகளை வசூலித்து ஒப்படைப்பது,மற்றும் RGB வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பன ஆய்படு பொருளாக இருந்தது.கீழ்கண்ட முடிவுகள் ஒரு மனதாக எடுக்கப்பட்டுள்ளது.
முடிவுகள்
1).மார்ச் 8 அன்று கடலூரில் வெகுச்சிறப்பாக குடும்ப விழா நடத்துவது.
2) மார்ச் மாத இறுதிக்குள் கிளை மாநாடுகளை நடத்தி முடிப்பது.
3) மார்ச் முதல் வாரத்தில் அனைத்து நன்கொடைகளையும் வசூலித்து மேல்மட்டங்களுக்கு அனுப்புவது.
4) கீழ்கண்ட தோழர்களை RGB வேட்பாளர்களாக நமது சங்கத்தின் சார்பில் நிறுத்துவது.என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
நமது வேட்பாளர்கள் 
தோழர் A.அண்ணாமலை SSSகடலூர் 
தோழர் I.துரைசாமி TM திண்டிவனம் 
தோழர் N.உமாசங்கர் TM விழுப்புரம் 
தோழர்களே மேற்கண்ட  முடிவுகளை வெற்றிகரமாக்கிட இணைந்து களப்பணியாற்றிடுவோம் வெற்றிபெறுவோம்.

கருத்துகள் இல்லை: