புதன், 22 அக்டோபர், 2014

ஒப்பந்த ஊழியருக்கான உண்ணாநோன்பு போராட்டம் ஒத்திவைப்பு

அன்பார்ந்ததோழர்களே !தோழியர்களே !!
கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இந்தமாத சம்பளம் மற்றும் போனஸ்  இன்று வரை வழங்காமை கண்டித்து கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு 21-10-2014 அன்று உண்ணாநோன்பு போராட்டம் நடைபெற்றது. தோழர்.A.அண்ணாமலை BSNLEU மாவட்டத் தலைவர்,  தோழர்.R.செல்வம் NFTE மாவட்டத் தலைவர் ஆகியோர்  கூட்டுத் தலைமை ஏற்றனர். NFTE மாநிலதுணைத் தலைவர் தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார்.

BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.K.T.சம்பந்தம்,
NFTE மாவட்டச்செயலர் தோழர். இரா.ஸ்ரீதர், உண்ணாவிரதம் இருந்து போராட்டத்தை விளக்கிப்பேசினர்.  BSNLEU சார்பில் தோழர்கள் V.குமார், N.சுந்தரம், P​.சேகர், E.பாலு, N.மூர்த்தி, S.பழனி TNTCWU மாவட்டசெயலர் M.பாரதிதாசன், J.முரளி NFTE சார்பில் தோழர்கள். S.தமிழ்மணி, V.இளங்கோவன், D.ரவிச்சந்திரன், TMTCLU மாவட்டத்தலைவர் M.S.குமார், TMTCLU மாவட்டச்செயலர் G.ரங்கராஜ், V.முத்துவேலு, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பண்டிகைக்காலம் என்பதையும் பொருட்படுத்தாமல் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

துணைப் பொதுமேலாளர் (நிர்வாகம்) பந்தலுக்கு நேரடியாக வந்து இச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து இதுபோன்ற நிகழ்வு பிற்காலங்களில் நடைபெறாது எனவும் உத்திரவாதம் அளித்தார். மேலும் வரும் 23-10-2014 வியாழன் அன்று உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் என இருபகுதிகளாக பிரித்து சுற்றியுள்ள ஊர்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளம் 
மற்றும் போனஸ்  வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தார். அவருடன் AGM(CFA), DE (VIG) உடனிருந்தனர். அந்த அடிப்டையில் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

NFTE மத்தியசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர். P.காமராஜ் அவர்கள் தோழர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார். இப்பிரச்சனையை முதன்மை பொது மேலாளரிடம் கொண்டு சென்ற
நமது இரண்டு மாநில சங்கங்களுக்கும்,மிகக்குறைந்த கால அவகாசத்தில் விடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்று கலந்துகொண்ட அனைவருக்கும்,  நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை: