புதன், 31 டிசம்பர், 2014

போராடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

ஊதிய மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி 28.12.2014 முதல் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள்  தமிழக அரசு, போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிடவும்,ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு அறவழியில் போராடும் தொழிலாளர்கள் மீது காவல் துறையை கட்டவிழ்த்து விட்டு   அடக்கி ஒடுக்க முயற்சிப்பதையும், தினக்கூலி அடிப்படையில் புதியதாக ஊழியர்கள் நியமனம் செய்வதை கைவிட வலியுறுத்தியும் 02.01.2015 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட நமது மாநிலச்சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. 

மாநிலச்சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் சக்திமிக்க ஆர்ப்பாட்டங்களை நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம் 
                                                                             தோழமையுள்ள 
                                                                                  K.T.சம்பந்தம் 

கருத்துகள் இல்லை: