வெள்ளி, 11 மார்ச், 2016

அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து நடத்திய
கடலூர் மகளிர் தின விழா – மார்ச் 10, 2016
கடலூர் வாடிக்கையாளர் சேவைமையத்தில் உணவு இடைவேளைவிழாவாகச் சிறப்பாக நடைபெற்றது.மகளிர் தினத்தை முன்னிட்டு டில்லிமுதல் சான்பிரான்ஸிஸ்கோ வரை 17மணி நேரம் விமானத்தை பெண்கள்மட்டுமே இயக்கினார்கள்.  அதுபோன்று கடலூரில் பெண்கள் மட்டுமேநடத்திய விழா.
 தோழியர்கள் B.S.நிர்மலா,K.லலிதா முன்னிலை வகிக்க தலைமைக்குழுவாக தோழியர்கள் R.உஷா, V.கீதா, D.கலைவாணிசித்ரா நாகராஜன்தலைமையேற்று நடத்தினர்தோழியர் உஷா பெண்கள் தினம் பூக்களால்உருவாக்கப்பட்டதல்ல போராட்டங்களால் உருவானது என்றுரைத்து நல்லதுவக்கம் செய்தார்.  தோழியர் கீதா பெண்கள் தினத்தின் வரலாற்றைஎடுத்துக் கூறி துவக்க உரையாற்றினார்.  தோழியர் சரோஜாதேவி கணீரெனஅனைவரையும் வரவேற்றார்,
கடலூர் கந்தசாமி நாயுடுகலைக்கல்லூரி (K.N.C) யின்பேராசிரியர் தோழியர்  P.சாந்தி சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார்.  அவருக்குதோழியர் கலைவாணி பொன்னாடைபோர்த்தி கவுரவித்தார்பேராசிரியர்தமது உரையில்,
அனைவருக்கும் உழைக்கும்மகளிர் தின வாழ்த்துகள்.  இப்போது நாடெங்கும் பல அமைப்புகளால் வணிகநிறுவனங்களால் ஊடகங்களால் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறதுஆனால் மகளிர் தினம் யாரால் எப்போது கொண்டாடத் துவங்கப்பட்டதுஅதுஅமெரிக்காவில் உழைக்கும் பெண்களால் –எளிய பெண்களால்சிறுபொறியாகத் துவக்கப்பட்டது.  18—ம் நூற்றாண்டில் பெண்கள் 14 மணி நேரம்உழைக்க நிர்பந்திக்கப்பட்டார்கள்.  அதுவும் அதே பணியைச் செய்யும்ஆண்களை விட குறைந்த கூலிக்கு.  இந்த அநீதியை எதிர்த்து அவர்கள்பெரிய போராட்டம் எதுவும் செய்யவில்லை, 10 மணிநேர வேலைநேரக்குறைப்புக்காக ஊர்வலம் சென்றார்கள்.  லாபம் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் தொழிற்சாலை முதலாளிகள் பொறுப்பார்களா?ஊர்வலம் வன்முறையால் நசுக்கப்பட்டது.
அமெரிக்கா  “லோவல்“ ஆயத்தஆடை தயாரிப்பு ஆலையில் பணிபுரிந்த பல்லாயிரக்கணக்கானபெண்கள் 10 மணி நேர வேலை,சமவேலைக்கு சம கூலி என்றகோரிக்கைகளை முன் வைத்துமீண்டும் ஊர்வலம்மீண்டும்அடக்குமுறை.  1908-ல் 15 ஆயிரம்பெண்கள் ஊர்வலம், 1911 ல் டிராய்டில்146 பெண்கள், கும்பகோணம் தீ விபத்து போன்றதொரு விபத்தில் கருகிச்சாம்பலாயினர் (அவர்கள் ஆலையை விட்டு வெளியே வர முடியாதபடிவெளியே பூட்டப்பட்டிருந்ததுஏனெனில் வேலை நேரத்தில் அவர்கள்வெளியே திரியக் கூடாது என்பதற்காக முதலாளிகளின் ஏற்பாடு)  பணிசெய்யும் ஆலைகளில் போதுமான கழிவறைகள் கிடையாதுகழிவறைக்குச்சென்று ஏன் தாமதமானது எனக் கேட்டு அதற்கு சம்பளப்பிடித்தம்,,,, இப்படிஎத்தனை அராஜகங்கள்தீ விபத்திற்குப் பின் அரசு சில மாற்றங்களைக்கொண்டு வந்தது.  இதைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில்பிப்ரவரி கடைசி ஞாயிறு மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டது.

1910 ல் உலக மகளிர் சங்கமாநாடு நடைபெற்றது.  அதில்தோழியர் கிளாரா ஜெட்கின்முன்மொழிந்தது தான் மார்ச் 8 ம் நாள்உலகெங்கும் சர்வதேச உழைக்கும்பெண்கள் தினமாகஅனுசரிக்கப்படுகிறதுஅமெரிக்காவில்பலநாடுகளைச் சேர்ந்த பெண்கள் பணிசெய்ததால் எழுச்சிக்கும் சர்வதேசபார்வைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 200 ஆண்டு கால போராட்ட வரலாற்றுப்பின்னணி கொண்டது இந்த தினம்.
ஆனால் போராட்டம் கோரிக்கைகள் தியாகம் என்பதையெல்லாம்மழுங்கடிக்கும் வகையில் ஆடல்,பாடல்,கோலம்,சமையல் போட்டி எனநம்மை முடக்கும் வகையிலேயே கொண்டாட்டங்களைத் திட்டமிட்டுநடத்துகிறார்கள்.  ஆனால் பெண்களின் நிலை?
இன்னும் பள்ளி முதல் காடு கழனி வரை பாலியல் துன்புறுத்தல்கள்நிர்பயா வழக்கில் என்ன நடந்தது?  அந்தப் பெண் ஏன் இரவு 10 மணிக்குமேல் ஆண் நண்பருடன் செல்ல வேண்டும் என பெண்களை வைத்தே பேசவைத்தார்கள்.  காரணம் இங்கு பெண்கள் உருவாவதில்லை,உருவாக்கப்படுகிறார்கள்.  அவள் எதை உடுத்த வேண்டும் எதை உண்ணவேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்பதெல்லாம் மற்றவர்கள் தான் முடிவுசெய்கிறார்கள்பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறைசெய்து சட்டகத்தில் அடைக்க எண்ணுகிறார்கள்.
ஆற நூறு ஆக்குவாங்க சின்னக் கண்ணு – அதை --அம்மா கையிலேகொடுத்துப் பாரு செல்லக்கண்ணு என்ற சினிமா பாடல்அப்படி சேமிப்பதுஅவள் குணம்தன் நலம் தன் உணவு என்பதைக் கூட கவலைப்படாதுகுடும்பத்தை கவனிப்பவள் அல்லவா பெண்.  பிறகு ஏன் நாட்டில் 33 சதவீதஇட ஒதுக்கீடு இன்னும் இழுபறியாகவே உள்ளது?

பொருளாதார ரீதியாக நாம்நன்றாக உள்ளோம்.  பொதுத்துறையான BSNL –ல் பல பெண்கள்பணியாற்றுகிறீர்கள்.  இந்தத் துறைநன்றாக இருக்க வேண்டும்என்பதற்கான பொதுப்போராட்டங்களில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டாமாபோராட்டங்களில் உருவான பெண்கள்தினத்தைக் கொண்டாடும் நாம் நமது துறையைக் காக்கும் வேலைநிறுத்தஇயக்கங்களில் பங்கேற்க வேண்டாமா?
ஆனால் போராட்டங்களில் பெண்கள் ஈடுபடுவதை இந்த சமூகம்சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை தான்.  ஏன் எங்கள் கல்லூரியில்மாணவிகள் போராடினார்கள்.  பல நூறு பெண்கள் பயிலும் கல்லூரியில்கழிவறைகள் இல்லைகுறைந்த பட்ச அடிப்படை வசதியைக் கேட்டுப்போராடுவது குற்றமா?  அப்படி நாங்கள் போராடும் போது நீங்கள் வந்துஆதரவு தெரிவித்திருக்க வேண்டாமா?  இங்கே உள்ள பெண் அதிகாரிகள்எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவிகள்ஆனால் எங்கள் மாணவிகளின்போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டது என்பது தான் உண்மை
ஆனால் இதனை மாற்ற தொடர்ந்து போராடத்தான் வேண்டும்.  சமூகஅநீதிகளை எதிர்த்து நாம் குரல் எழுப்ப வேண்டும்அத்தகைய போராட்டகுரல்களோடு நமது குரலும் சேர்ந்து ஒலிக்க வேண்டும்.  அதுதான் பெண்கள்தினம் கொண்டாடத் துவங்கிய அந்த நூற்றாண்டு பெண்களின் தியாகத்திற்குநாம் நியாயம் செய்தவர்களாக இருப்போம்.  மே ஒன்றாம் நாள் மேதினம்போல மார்ச் 8 பெண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும்மேம்போக்காக பொழுபோக்காகக் கொண்டாடும் நிலையை மாற்றுவோம்.சமூகத்திற்கான நமது பங்களிப்பைச் செலுத்துவோம்.  வாய்ப்புக்கு நன்றிஅனைவருக்கும் மீண்டும் சர்வதேச உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!
அடுத்து நமது DGM (CM & EB )தோழியர் ஜெயந்தி அபர்ணா அவர்கள்வாழ்த்துரை வழங்கினார்அவருக்குசித்ரா நாகராஜன் பொன்னாடைபோர்த்தினார்தமது உரையில்,அலுவலக பணி காரணமாகதாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோரிஇந்த விழா அடுத்த ஆண்டு முழுநாள்        
விழாவாக மாலை நேர விழாவாக நடத்தப்பட வேண்டும்.  அதற்குபெண்களாகிய நாம் ஒருநாளாவது நமக்கான விழாவை 5 மணிக்குப் பிறகும்இருந்து நடத்த முன்வரவேண்டும்.  பேராசிரியர் கழிவறைவசதி பற்றிகுறிப்பிட்டார்  உண்மைதான் நான் பள்ளியில் கல்லூரியில் படிக்கும் போதும்அதே நிலைமைதான்.  ஆனால் இது போன்று போராட முடியும் என்றுஎங்களுக்குத் தோன்றியதில்லை .  பல கிராமப்புறஅரசுப் பள்ளிகளில்கழிவறை வசதிகள் சுகாதாரம் மேம்படுவதற்கு நம்மால் ஆனவற்றை நாம்செய்து உதவ முடியும்.  இதற்கெல்லாம் நமது பார்வை விசாலமடையவேண்டும்.  புடவை நகைகள் என நாம் நம்மையே முடக்கிக்கொள்வதிலிருந்து வெளியே வரவேண்டும்.  அனைவருக்கும் வாழ்த்துகள்
இறுதியாக தோழியர் S. மணிமேகலை நன்றி கூறினார்.
அனைவருக்கும் துவக்கத்தில்எலுமிச்சை சாறு  வழங்கப்பட்டதுபோல கூட்ட முடிவில் இனிமையானசுவையான உணவு வழங்கப்பட்டதுஇதில் குறிப்பிட வேண்டிய ஒன்றுதிட்டமிடும் போது மதிய உணவுஏற்பாடு இல்லை.  ஆனால் எங்கள்விழாவில் உணவில்லாமலா எனவிழா மகளிர் அணி உணவுக்குஏற்பாடு செய்தார்கள் என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.  இதனைச்சொல்லும் போது மகளிர் தினத்தை ஒட்டி வந்த ஒரு கவிதையின் ஒரு பகுதிமிகப் பொருத்தமானது
அம்மா --
அவளை எந்த பொய் சொல்லியும்
ஏமாற்றிவிடலாம் – ஆனால்
பசி இல்லை,
சாப்பிட்டு விட்டேன்
என்று மட்டும் கூறி
ஏமாற்றவே முடியாது “  
மிகச் சிறப்பான விழா பெருந்திரளாக மகளிர், ஊழியர்கள்,அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்கத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதனைவிஞ்சப் போவது அடுத்தடுத்த ஆண்டுகளில் இவர்கள் நடத்தும்விழாக்களாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை: