திங்கள், 21 மார்ச், 2016

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
    கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்றைய தேதி வரையில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படவில்லை. இது மாதாமாதம் தொடர்கதையாகி வருகிறது கார்ப்பரேட் அலுவலகமும், மாநில நிர்வாகமும் பல உத்தரவுகள் பிறப்பித்தும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்க நிர்வாகம் தாமதம் செய்து வருகிறது. இப் போக்கினை கண்டித்து இன்று 18-03-2016 அன்று மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் BSNLEU, NFTE ,TNTCWU TMTCLU, ஆகிய சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.அனைத்து கிளைகளிலும் சிறப்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். கடலூரில் GMஅலுவலக வாயிலில் இணைந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் 

நெய்வேலி 


திண்டிவனம் 
                                                                                           சிதம்பரம் 


 பண்ருட்டி 



கருத்துகள் இல்லை: